நான் துறவியல்ல- சோனியா காந்தி
டெல்லி:
என்னை துறவி என்று அழைக்காதீர்கள், இன்னும் நான் அரசியல்வாதி தான், நானும் சாதாரண மனுஷிதான் என்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
மன்மோகன் சிங் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.
சோனியாவிடம் சில நிருபர்கள், ஒரு துறவியைப் போல பிரதமர் பதவியை தானம் செய்து விட்டு உங்களால் எப்படிவழக்கம் போல செயல்பட முடிகிறது என்று கேட்டபோது, நான் நிச்சயம் துறவி அல்ல, துறவியாகவும்விரும்பவில்லை. ானும் உங்களைப் போல சாதாரண மனுஷிதான். பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததில் எனக்குஎந்த வருத்தம் இல்லை.
விரைவில் காங்கிரஸ் நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்து நான்ஒதுங்கிவிடவில்லை. காங்கிரஸை பலப்படுத்தும் வேலைகளில் இனி தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.
சோனியாவுக்கு டாக்டர் பட்டம்?
இந் நிலையில் சீக்கியரான மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய சோனியாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க பஞ்சாப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஆனால், அதை அவர் ஏற்பாரா என்று தெரியவில்லை.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் கூட்டம்துணைவேந்தர் ஸ்வரன் சிங் போபராய் தலைமையில் நடந்தது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications