சோனியா பிரதமர் பதவி ஏற்காதது ஏன்?: வி.எச்.பி. விளக்கம்
பெங்களூர்:
சட்டப்படி பதவி போய் விடும் என்று பயந்து தான் சோனியா காந்தி, பிரதமராகப் பதவியேற்கவில்லை என விஸ்வஹிந்து பரிஷத் கூறியுள்ளது.
இது குறித்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கல் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டில் இந்தியர் ஒருவர் உயர் பதவிக்கு வர அனுமதி இருந்தால், அந் நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில்உயர் பதவிக்கு வரலாம் என்று சொல்கிறது இந்திய அரசியல் சட்டம்.
ஆனால், இத்தாலிய அரசியல் சட்டத்தின்படி வெளிநாட்டவர் உயர் பதவிக்கு வர முடியாது என்ற தடை உள்ளது.
இந்த அடிப்படையில் சோனியா பிரதமராகப் பதவியேற்றிருந்தாலும், அவரது பதவி நீதிமன்றத்தால்பறிக்கப்பட்டிருக்கும். இந்த பயத்தால் தான் பிரதமராகாமல் ஒதுங்கிக் கொண்டார் சோனியா.
இத்தாலிய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, வெளிநாட்டினர் உயர் பதவிக்கு வரலாம் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தால், சோனியாவும் இங்கு பிரதமராகியிருக்க முடியும்.
பிரியங்காவை மணக்க தனது மருமகன் வதேராவை கிருஸ்துவ மதத்துக்கு மாற்றியவர் சோனியா.மற்றவர்களையும் இந்த வாடிகன் சிட்டி சோனியா விடடு வைப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
வாடிகன் சிட்டியின் அதிகாரம் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்என்றார் சிங்கல்.












Click it and Unblock the Notifications