அதிமுகவிடம் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட வேண்டும்: திருநாவுக்கரசர்
கோவை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என அக் கட்சியின் தலைவர்களில்ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சமீப காலமாக பா.ஜ.கவின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்திருநாவுக்கரசர்.
கூட்டணி குறித்து தேர்தல் முடிந்த பின்னரே வாய் திறப்பேன் என்று கூறிய திருநாவுக்கரசர் இப்போதுசொன்ன மாதிரியே பேச ஆரம்பித்துள்ளார்.
அதிமுகவுடன் தனது விருப்பத்தையும் மீறி கூட்டணி வைத்தது, முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பணிந்து தன்னை கட்சியில் ஓரம் கட்டியது என பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள் நடந்து கொண்ட விதம்குறித்து தாக்கி வருகிறார்.
அதிமுக கூட்டணியை விட்டு பா.ஜ.க விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இந்தக்கூட்டணி தொடர்ந்தால் கட்சியை விட்டு விலகவும் அவர் தயாராகி வருகிறார்.
தானாகவே விலக விரும்பாத அவர், தன்னை கட்சியே நீக்கட்டும் என்று விரும்புவதாக அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,
தேர்தலில் வாஜ்பாய்க்கு எதிராக அலை வீசவில்லை. மாநில அரசுக்கு எதிராகத் தான் மக்கள்வாக்களித்துள்ளார்கள்.
சிறப்பான நிதியமைச்சராக செயல்பட்ட மன்மோகன் சிங் பிரதமரானது வரவேற்புக்குரியது. பா.ஜ.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை சிங் தொடர வேண்டும்.
நதி நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
பொடா சட்டத்தால் அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனாலபொடாவை வாபஸ் பெறலாம்.
தமிழக அரசின் மோசமான செயல்பாடுகள் காரணமாகவே பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications