மீண்டும் லாட்டரிக்கு தமிழக அரசு அனுமதி?
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி தருவது குறித்து மாநில அரசுதீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பல அதிரடி நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறார். ரேஷன் கார்டுகளுக்கு எச் முத்திரை பதிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அந்த ரத்து வரிசையில் அடுத்து இடம் பெறப் போவது லாட்டரிச் சீட்டு என கூறப்படுகிறது. லாட்டரிச் சீட்டுவிற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பார்வையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் என சுமார் 25 லட்சம் பேர் லாட்டரிச் சீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றுதமிழக லாட்டரிச் சீட்டு விற்பனையாளர் சங்கம் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
லாட்டரிச் சீட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ. 70 கோடி வரை வருவாய் கிடைக்கும்.
தேர்தல் தோல்வியால் பல்வேறு சலுகைகளை மீண்டும் அறிவித்ததால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல்செலவீனங்களை சமாளிக்க இந்தப் பணம் உதவியாக இருக்கும் என்பதால் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும்அனுமதி வழங்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications