சோனியாவுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி:
சோனியா காந்தியை பிரதமராக்கக் கூடாது என ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதை 5 நபர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில்நிர்பந்திக்கப்பட்டதையடுத்து, ரூ. 30,000 அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லக்னெளவைச் சேர்ந்த அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த கோடை கால நீதிபதி ருமா பால் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், சோனியாபிரதமராக பதவியேற்க மறுத்துவிட்டதால் இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லைஎன்று கூறி தள்ளுபடி செய்தார்.
இதை ஏற்க மறுத்த அசோக் பாண்டே, சோனியா விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த மனுவை 5 நபர் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்கவேண்டும் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், சோனியாவுக்கு எதிராக ஹரி சங்கர் ஜெயின் தாக்கல் செய்தமனுவை விசாரித்தபோதே தீர்க்கப்பட்டுவிட்டது. மக்களவைக்கு சோனியா போட்டியிடக் கூடாதுஎன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்துள்ளது. இதனால் இதில் மேற்கொண்டு விசாரிக்கஏதுமில்லை என்றனர்.
ஆனாலும் தொடர்ந்து அசோக் பாண்டே, 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என மீண்டும்மீண்டும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். மேலும் சரியாக விசாரிக்காலேயே மனுக்களைதள்ளுபடி செய்வது நீதிமன்றங்களின் வழக்கமாகிவிட்டது என்றார்.
இதனால் கடுப்பான நீதிபதி ருமா பால், அவருக்கு ரூ. 20,000 அபராதம் விதித்தார்.
இதன் பிறகும் கோர்ட் ஹாலைவிட்டு வழக்கறிஞர் பாண்டே வெளியேறாததால் அபராதத்தொகையை ரூ. 25,000 ஆகவும் பின்னர், அதை . 30,000 ஆகவும் நீதிபதிகள் உயர்த்தினர்.அப்போதும் பாண்டே தொடர்நது நீதிபதிகளை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, உங்களை கைது செய்ய உத்தரவிடுவோம் என நீதிபதிகள் எச்சரித்த பின்னர் பாண்டேமன்னிப்பு கேட்டுவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவருக்குவிதிக்கப்பட்ட அபராதத்தை நீதிபதிகள் ரத்து செய்தனர்.












Click it and Unblock the Notifications