புறக்கணிக்கப்பட்ட தென் மாவட்டங்கள்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களில் ப.சிதம்பரத்தைத் தவிர தென் மாவட்டத்தைச் சேர்ந்த வேறுயாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு 12 பேர் மத்திய அமைச்சர்கள் ஆகியுள்ளனர். தமிழகத்தின்வடக்கு, மத்தியப் பகுதி மற்றும் மேற்குப் பகுதி மாவட்டங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.ஆனால் தென் மாவட்டங்கள் சுத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ப.சிதம்பரம் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக உள்ளார். அவரும் கூட கிழக்குப் பகுதிமாவட்டத்தில்தான் வருகிறார். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல்உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் (இருவரும் சென்னை), அன்புமணி (திண்டிவனம்), ஆர்.வேலு (அரக்கோணம்),வேங்கடபதி (கடலூர்) ஆகிய 5 பேரும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல, இளங்கோவன் (கோபிச்செட்டிப்பாளையம்), சுப்புலட்சுமி ஜெகதீசன் (திருச்செங்கோடு) ஆகியஇருவரும் மேற்குப் பகுதி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
ரகுபதி, ராஜா, பழனிமாணிக்கம் ஆகியோர் மத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம் கிழக்குப் பகுதியைச்சேர்ந்தவர். தென் தமிழகம் மட்டும்தான் மத்திய அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல்புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநதி இதை சூசகமாகக் குறிப்பிட்டார்.கூடுதலாக 2 அமைச்சர் பதவி கிடைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும், நாங்களும் அதை எதிர்பார்த்தோம்,கிடைத்திருந்தால் அனைத்துப் பகுதிகளுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications