சபாநாயர் பதவியை ஏற்குமா மார்க்சிஸ்ட்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களவை சபாநாயகர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத்சாட்டர்ஜிக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்தாலும், அதை ஏற்பது குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள்இதுவரை முடிவெடுக்கவில்லை.
கடந்த இரு தினங்களாக இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர். 26ம்தேதி தங்களது முடிவை அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் பதவியை ஏற்கலாம் என மூத்த தலைவர்களான ஜோதிபாசு மற்றும் ஹர்கிசன் சிங் சுர்ஜித்ஆகியோர் கூறுகின்றனர்.
ஆனால், இந்தப் பொறுப்பை ஏற்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக்குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசில் எந்த பதவியையும் வகிக்கவேண்டாம் என ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.
இதனால் முடிவெடுப்பது நாளை மறுதினத்துக்கு (26ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications