திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம்: விமரிசையாக நடந்தது
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று படு விமரிசையாக நடந்தது.
திருவல்லிக்கேணியி பார்த்தசாரதி கோவிலில் கடந்த 1992ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்குஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஐதீகப்படி, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இன்று காலை கோவில் கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு பகவானின் அருள் பெற்றனர்.நிகழ்ச்சியையொட்டி மாநகரப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.
முன்னதாக ரூ. 50 லட்சம் செலவில் கும்பாபிஷேகப் பணிகள் செய்யப்பட்டன. கோவில் முழுமையாகபுதுப்பிக்கப்பட்டது. ரூ. 2.5 லட்சம் செலவில் தங்கக் கலசங்கள் நிறுவப்பட்டன. மூன்றரை அடி உயரடைய 5கோபுரக் கலசங்கள் கோவிலின் ஆனந்த விமானத்தின் மீது அமைக்கப்பட்டன.
மூலவர் விமானத்தின் மீது தங்கக கூரை வேயப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் உதவியுடன்கோவில் முழுமையாக சுத்தப்படுதப்பட்டு பளிச்ஆக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications