அதிமுக தோல்வி: தொண்டர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியுற்றதால் விரக்தி அடைந்த 31 வயது தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் கண்டமங்கலம் அதிமுகமாணவர் அணி பொருளாளராக இருந்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றதால் பெரும் வருத்தமடைந்தார்.
தான் தீவிரமாக பணியாற்றியும் திண்டிவனம் தொகுதி அதிமுக வேட்பாளர் அருள்மொழித் தேவன் தோற்றுவிட்டாரே என்று விரக்தியடைந்த அவர் நேற்றிரவு தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications