எம்.பி.பி.எஸ்., பி.இ. நுழைவுத் தேர்வில் பெரும் குழப்பம்: அண்ணா பல்கலைக்கு எதிராக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வைரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்களில் பெருமளவில் குளறுபடிகள்இருந்ததாக புகார்கள் எழுந்தன. கேட்கப்பட்ட கேள்விகளில் 22 கேள்விகளுக்கு மாணவர்களால் பதிலளிக்கமுடியவில்லை.

கேள்விகள் மிகக் கடுமையாக இருந்தன. இதனால் இந்தக் கேள்விகளை அண்ணா பல்கலைக்கழகம் மதிப்பீடுசெய்யாமல் ரத்து செய்து விட்டது.

ஆனால் அதற்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பலர்பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையேகடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும், புதிய முறையில் மாணவர்சேர்க்கையை நடத்தவும் உத்தரவிடவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு முடியும் வரை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கானநேர்காணலையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+