புலிகளின் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்
கொழும்பு:
இனப் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடஇந்தியா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதர் நிரூபம் சென் இதனைத் தெரிவித்தார். யாழ்பாணத்தைச் சேர்ந்தபாரம்பரிய கலைகளுக்கான வளர்ச்சிக் கழகத்திற்கு இசைக் கருவிகளை வழங்கி சென்பேசியதாவது:
வட கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியாவுக்கு அழைப்பு வந்தால்நிச்சயம் அதை ஏற்போம். அந்தப் பணிகளில் இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள்ஈடுபடுத்தப்படும்.
அதே நேரத்தில் புலிகளுடன் இந்திய அரசு எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ளாதுஎன்றார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா முன்வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். புலிகளின் ஒத்துழைப்பும் அனுமதியும் இல்லாமல் இந்தப்பணிகள் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications