திமுகவுக்கு கப்பல் போக்குவரத்து துறையை விட்டு தந்த ராவ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனக்கு ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை திமுகவுக்கு விட்டுத் தர தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் முன் வந்துள்ளார்.
டி.ஆர். பாலுவுக்கு ஒதுக்கப்பட்ட தரைவழிப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்த கப்பல்போக்குவரத்துத் துறையை பிரித்து அதை ராவிடம் வழங்கியது காங்கிரஸ்.
இதனால் கடுப்படைந்த திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர் பொறுப்பேற்க தனது கட்சியினரைஅனுமதிக்கவில்லை.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்திரசேகர ராவிடம்பேசினார். அப்போது கூட்டணியின் ஒற்றுமைக்காக கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுத்தரவும், தனக்கு வேறு ஒரு துறையை ஒதுக்குமாறும் ராவ் கேட்டுக் கொண்டார்.
அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மன்மோகன் சிங், கப்பல் போக்குவரத்துத் துறையைபாலுவுக்கு ஒதுக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications