பி.எஸ்.என்.எல். தனியார் மயமாகாது: தயாநிதி
டெல்லி:
பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என மத்தியதகவல் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்ற தயாநிதி மாறன்தெரிவித்தார்.
அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றவுடன் இரு துறைகளின் உயரதிகாரிகளுடன் தயாநிதி ஆலோசனைநடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனியார்மயமாக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில்இரு நிறுவனங்களும் இருந்தன. தற்போது இவை லாபகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதால் இருநிறுவனங்களும் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
எக் காரணம் கொண்டும் லாபகரமான அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்க மாட்டோம். அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாருடன் போட்டியிட்டு வெல்ல வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளும்செய்யப்படும். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சேவையில் மேலும் பல வசதிகள் செய்து தரப்படும்.
சாப்ட்வேர் தொழிலின் வளர்ச்சிக்கு அரசு முழு உதவிகள் செய்யும். இந்தியாவை அமெரிக்கா, ஐரோப்பியநிறுவனங்களின் அவுட் சோர்சிங் தலைமையகமாக மாற்றுவோம்.
நாட்டில் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்டர்நெட் வசதி நாட்டின்மூலை, முடுக்குகளுக்கும் ஊடுருவும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தரப்படும்.
தனியார் செல்போன் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் பி.எஸ்.என்.எல்லுக்கு அதி நவீனதொழில்நுட்ப வசதிகள் கிடைக்கச் செய்வேன் என்றார் தயாநிதி மாறன்.
டி.ஆர். பாலு பேட்டி:
இதேபோல, தரை வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பாலுசெய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குஉறுதுணையாக தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்தப்படும்.
சேது சமுத்திரம் திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். எனவே அத் திட்டத்தைவிரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications