புதுவை அருகே கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூடு
பாண்டிச்சேரி:
புதுவை அருகே இரு கிராமத்தினருக்கு இடையே மூண்ட பெரும் மோதலைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தினர்
புதுவை அருகே உள்ளது நெட்டப்பாக்கம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரு கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடினர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே மோதல்ஏற்பட்டது.
இந்தத் தகவல் இரு கிராமத்திற்கும் பரவியது, இதையடுத்து பயங்கர ஆயுதங்களுடன் இரு கிராமத்தினரும் மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.
இந் நிலையில் இன்று காலை மீண்டும் இரு கிராமத்தினரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு போலீஸார் எச்சரித்தும் கலையவில்லை. தடியடி நடத்தியும் பலனில்லாமல் போகவே, வானத்தைநோக்கி நான்கு முறை போலீஸார் சுட்டனர்.
இதற்கும் அடங்காவிட்டால், கூட்டத்தை நோக்கி சுடுவோம் என போலீசார் எச்சரித்த பின்னரே இருகிராமத்தினரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு ஆயுதம் ஏந்தியபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications