ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை நீக்கும் பணி தொடங்கியது
சென்னை:
ரேசன் அட்டைகளில் அச்சிடப்பட்ட எச் முத்திரையை நீக்கும் பணி தொடங்கியது. ஜூன் மாதம் 30ம் தேதி வரைஎச் முத்திரையை பொது மக்கள் நீக்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் கிடைத்த பெரும் அடியைத் தொடர்ந்து, பல சலுகைப் பறிப்புகளை தமிழக அரசு ரத்துசெய்யது. அதில் முக்கியமானது குடும்ப அட்டைகளில் பதிக்கப்பட்ட எச் முத்திரை நீக்கம்.
ரூ. 5,000 மாத வருமானம் உள்ள குடும்பத்தினரின் ரேசன் அட்டைகளில் இந்த முத்திரையைக் குத்திய அரசு,அவர்களுக்கு ரேசனில் எந்தப் பொருளும் தரப்படாது என்று அறிவித்தது.
இப்போது இந்த முத்திரையை நீக்கவும், ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும், அனைத்துப் பொருள்களையும்வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து எச் முத்திரை நீக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், பிறமாவட்டங்களில் வட்டார வழங்கல் அலுவலகங்களிலும் எச் முத்திரை நீக்கும் பணி நடக்கிறது.
பொது மக்கள் இங்கு சென்று ரேசன் கார்டுகளைக் கொடுத்தால் முத்திரை நீக்கப்படும். ஜூன் மாதம் 30ம் தேதி வரைஇந்தப் பணி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. எல்லா வேலை நாட்களிலும் இந்தப் பணி நடக்கும்.
ஜூலை 1ம் தேதி முதல் வழக்கம் போல பொருட்களை பொது மக்கள் ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.