மக்களவை சபாநாயகராகிறார் கம்யூ. தலைவர் சாட்டர்ஜி
டெல்லி:
மக்களவை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிபதவியேற்கவுள்ளார்.
தங்களது ஆட்சிக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தர முன் வந்ததால், சபாநாயகர்பதவியை மார்க்சிஸ்ட்டுக்கு விட்டுத் தர காங்கிரஸ் முன் வந்தது.
கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்தப் பதவியைஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளனர். சோம்நாத் சாட்டர்ஜியை அந்தப் பதவிக்குபரிந்துரைத்துள்ளனர்.
பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா:
இதற்கிடையே, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா தனது பதவியைராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவியில் முன்னாள் வெளியுறவுத்துறைச்செயலாளர் ஜே.என்.தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாயின் ஆட்சியில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார் மிஸ்ரா. ஆட்சி மாற்றத்தையடுத்துதனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவியில் தீட்சித்நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அமைதி காக்கும் படையை அனுப்பச் செய்தது தீக்ஷித்தான் என்பது நினைவுகூறத்தக்கது. பாகிஸ்தான், இலங்கையில் இந்தியத் தூதராகவும்பணியாற்றியுள்ளார் தீக்ஷித்.
சோலி சொராப்ஜி விலகல்:
அதே போல மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து சோலி சொராப்ஜியும் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் அமைதிப் பேச்சு நடத்தி வந்த மத்திய அரசின சிறப்புப்பிரதிநிதி என்.என்.வோராவும் ஆட்சி மாற்றத்தையடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆனால், அவரது ராஜினாமாவை மன்மோகன் சிங் இதுவரை ஏற்கவில்லை.












Click it and Unblock the Notifications