For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரோஸ்லின் செல்வஅரசி கணவர் கொலை வழக்கு: தந்தைக்கு முன் ஜாமீன் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையைச் சேர்ந்த மாணவி ரோஸ்லின் செல்வ அரசியின் கணவர் கடத்திக் கொலை செய்த, ரோஸ்லின் தந்தைக்குசென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

ரோஸ்லின் செல்வ அரசியின் காதல் கணவர் பிரதாப்பை, ரோஸ்லின் தந்தை ராதாகிருஷ்ணன் கடத்திச் சென்றுகொலை செய்துள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. இந்தப் புகாரை போலீசில் கொடுத்ததே ரோஸ்லின் தான்.

இந்த வழக்கில் தலைமறைவாகிவிட்ட ராதாகிருஷ்ணன், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், ராதாகிருஷ்ணனின்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து ராதாகிருஷ்ணனைக் கைது செய்ய சென்னை சேலையூர் போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

கொலையாளிகள் 2 பேர் சரண்:

இந் நிலையில் ராதாகிருஷ்ணனின் தூண்டுததால் பிரதாப்பைக் கொலை செய்த 2 பேர் மதுரை திருமங்கலம்நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் மாஜிஸ்திரேட் செல்லப்பாண்டியின் முன் இந்த 2 பேரும் சரணடைந்தனர்.

ஏற்கனவே இந்தக் கொலைக்கு உதவிய இன்னொரு நபரான அம்பேத்கர் என்பவரை சென்னை சேலையூர்போலீஸார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X