மனைவி, போலீசார் மீது அமிலம் வீசிய கணவர்
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் கையில் அமிலத்துடன் மனைவியை விரட்டிய கணவரால் பெரும் பரபரப்புஏற்பட்டது. அவரைத் தடுத்த இரு போலீஸ்காரர்கள் மீது அமிலம வீசப்பட்டது.
மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசி. இவரது கணவர் முருகன். இருவரும் மதுரையில்உள்ள சம்பளக் கணக்கு அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதுவழக்கமாம்.
இது தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வந்தபோது, கலையரசி போலீசிலும் புகாரும்கொடுத்துள்ளார்.
சமீபத்தில்தான் இருவரும் வாடிப்பட்டிக்கு மாறிச் சென்றனர். இந் நிலையில், புதன்கிழமை காலை வாடிப்பட்டியில்இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்தார் கலையரசி. பஸ்சிலிருந்து இறங்கிய அவர் நேராக அங்கிருந்த காவல்அறைக்கு ஓடினார்.
தனது கணவர் கையில் அமிலத்துடன் துரத்திக் கொண்டு வருவதாகவும், காப்பாற்றுமாறும் கோரி அவர் கதறினார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் பெரியசாமி, கேசவன் ஆகிய இருவரும் வெளியே வந்து பார்த்தபோது,முருகன் கையில் அமிலத்துடன் வந்து கொண்டிருந்தார்.
அவரை போலீசார் தடுக்க முற்பட்டபோது அமிலத்தை காவலர்கள் மீது ஊற்றிய முருகன் மிச்சத்தை மனைவி மீதும்ஊற்றிவிட்டு தன் மீதும் ஊற்றிக் கொண்டார்.
அமிலம் ஊற்றப்பட்டதால் 4 பேரும் கூக்குரல் எழுப்ப, இதனால் பெரியார் பஸ் நிலையமே பெரும் பரபரப்பில்ஆழ்ந்தது.
காயமடைந்த நான்கு பேரும் ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நான்குபேருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications