வேலூர் சிறையில் பொடா கைதிகள் உண்ணாவிரதம்: 5 பெண்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர் :
சிறை அதிகாரியை கண்டித்து வேலூர் சிறையில் உண்ணவிரதம் இருந்த பெண் கைதிகள் 5 பேர் மயங்கிவிழுந்தனர் .
வெடிகுண்டு வைத்திருந்தாக விஜயா என்கிற ரமணி , ரீட்டா என்கிற உமா, தேவயானி, பத்மா, ஆனந்தி ஆகிய 5பேரும் கடந்த வருடம் தர்மபுரியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நக்ஸலைட்டுகள்என போலீஸார் கூறினர்.
இந் நிலையில் சிறையில் தங்களுக்கு சரியாக உணவு தரப்படவில்லை என்று கூறி கடந்த 25ம் தேதி முதல் இவர்கள்உண்ணவிரதம் இருந்து வந்தனர்.
3 நாட்களாக உண்ணாவிரதம் தொடரவே பலமிழந்த இவர்கள் மயக்கம் அடைந்தார்கள். இதனையடுத்து வேலூர்அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications