For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று செயல் திட்டத்தில் உறுதிமொழி தந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை வாழ்த்த செம்மொழியாகப் போகும் தமிழில் கூட வார்த்தைகள்இல்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் திமுக போராட்டம் நடத்தியது. அதில் பங்கேற்ற 1.5 லட்சம் திமுகவினர்சிறை சென்றனர்.

இதை ஆரோக்கியமற்ற அரசியல் என்று பாஜக தலைவர்கள் கேலி செய்து விமர்சித்தனர்.

ஆனால் நேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வெளியிட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் திமுகவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும்அறிவித்துள்ளனர்.

இதற்காக அவர்களை வாழ்த்தலாம் என்றால் செம்மொழியாகப் போகும் தமிழில் கூட அதற்கு வார்த்தைகள்இல்லை.

இந்த அறிவிப்பு 40 இடங்களைத் தந்த வாக்காளப் பெருமக்களுக்கும், திமுக கூட்டணிக்கும் கிடைத்த மகத்தானவெற்றி.

சென்னையில் தான் முதன்முறையாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் மத்திய அரசுசெயல்படுத்தப் போகிறது. திமுகவின் கோரிக்கையை ஏற்று இதுவும் செயல் திட்டத்தில்சேர்க்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X