ஊட்டி: சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்திய பழ வியாபாரிகள்
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த 3 பேரை கத்தியால் குத்தினர் பழ வியாபாரிகள். இதையடுத்துவியாபாரிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.தொட்டபெட்டா மலைப் பகுதிக்குச் சென்ற அவர்கள் அங்குள்ள பழ வியாபாரியிடம் பழங்கள் வாங்கினர்.
வியாபாரி அதிக விலை கூறியதால் விலையைக் குறைக்குமாறு அசோகன் கூறினார். இது வாக்குவாதமாகமாறியது.
ஆத்திரமடைந்த பழ வியாபாரி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் தங்களிடமிருந்த பழம்அறுக்கும் கத்தியைக் கொண்டு அசோகன், அவரது மகன்கள் ரூபன் (18), ஜோத்சன் (14) ஆகியோரைக் குத்தினர்.
இதையடுத்து போலீசில் அசோகன் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தையும், சுரேஷையும்போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications