தமிழகத்தில் 8 புதிய ரயில் தடங்கள்: வேலு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மீட்டர்கேஜ் ரயில் பாதைகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அகல ரயில்பாதைகளாக மாற்றியமைக்கப்படும் என்று ரயில்வேத்துறை இணையமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு ரயில்வே இணையமைச்சரான பின்னர் முதல் முறையாக வேலூர் வந்தார். அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் அகல ரயில் பாதைகளாகமாற்றப்படும்.
மானாமதுரை-தூத்துக்குடி, நாமக்கல்-கும்பகோணம், சென்னை-மகாபலிபுரம், ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்,திண்டிவனம்-வாலாஜா உள்பட மொத்தம் 8 புதிய ரயில் வழித் தடங்கள் உருவாக்கப்படும்.
ரயில்கள் காலதாமதம் இல்லாமல் வந்து செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஆர்.வேலு.












Click it and Unblock the Notifications