சோதனைகளை வென்ற கண்மணிகள்
சென்னை
வீட்டில் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்புத் தேர்வில் சில மாணவ, மாணவிகள் நல்லமதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
* ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மாணவி மாளவிகா. அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டடிபட்டுஇரண்டு கைகளையும் இழந்தவர். சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஒரு தனியார் டுடோரியல் மையத்தில் தனித்தேர்வராக பத்தாம் வகுப்புப் படித்து தேர்வெழுதினார்.
இதில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்மாளவிகா. 500க்கு 483 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார் மாளவிகா.
எதிர்காலத்தில் கலெக்டராக வேண்டும் என்பதுதான் இந்த சாதனை மாணவியின் தாகம்.
* முறுக்கு விற்றுக் கொண்டே படிப்பிலும் பின்னி எடுத்துள்ளார் திருச்சி மாணவர் ராமச்சந்திரன். இவர் 500க்கு 493மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது மாணவராக தேர்வு பெற்றுள்ளார்.
இவரது தாயார் விசாலாட்சி முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார்.மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள விசாலாட்சிமிகவும் சிரமப்பட்டுத்தான் தனது மகனை படிக்க வைத்து வருகிறார்.
தாயின் நிலையை உணர்ந்த ராமச்சந்திரனும் நன்றாக படித்து வந்தார். படிக்கும் நேரம் போக மற்ற சமயத்தில்தாயுடன் சேர்ந்து முறுக்கு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
எதிர்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் இந்த ஏழை மாணவன் இலட்சியம். தனது கல்வியைத் தொடரமற்றவர்களின் உதவி கிடைத்தால் அதை ஏற்க தயாராக உள்ளார் ராமச்சந்திரன்.
* உன்னை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுக் காட்டுகிறேன் என்று அக்காவிடம் சவால் விட்டு அதை சாதித்துஅக்காவிடமிருந்து ரூ. 1,000 பந்தயப் பணத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார் நாகர்கோவில் மாணவி.
நாகர்கோவில் லிட்டில் பிளவர் பள்ளி மாணவி பிரவீணா குரு சாந்தி. இவர் 492 மதிப்பெண்களுடன்மாநிலத்திலேயே 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது கதை கொஞ்சம் வித்தியாசமானது. இவரது அக்காபிரியா வசந்தி பத்தாம் வகுப்புத் தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3வது இடத்தைப்பிடித்திருந்தார்.
உன்னை விட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றால் என்ன பந்தயம் என்று அக்காவிடம் பெட் கட்டினார்குருசாந்தி. அப்படி எடுத்தால் ரூ. 1,000 தருகிறேன் என்று அக்காவும் சவால் விட்டிருந்தார்.
சவாலை சீரியஸாக எடுத்து நன்றாகப் படித்த பிரவீணா குருசாந்தி அக்காவை விட அதிக மதிப்பெண்கள் எடுத்துசாதனை படைத்து, பந்தயத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
தனது அக்காவைப் போல டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பதுதான் பிரவீணா குருசாந்தியின் லட்சியமாம்.
* மதுரை நிர்மலா மேல் நிலைப்பள்ளி மாணவி ஜனனி 2 மதிப்பெண்களில் மாநிலத்திலேயே முதலிடத்தைத் தவறவிட்டுள்ளார். இவரது வீட்டில் யாரும் அவ்வளவாக படித்ததில்லை. தந்தை பாலகிருஷ்ணன் பலசரக்குக் கடைவைத்துள்ளார்.
பத்தாவது வகுப்புத் தேர்வில் சென்னை வழக்கம் போல பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை,நாகர்கோவில், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட மாணவ, மாணவிகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்று அதிகஅளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவிலான ரேங்கிலும் இவர்களே முதலிடத்தில் உள்ளனர்.
அதே போல சாதாரண பள்ளிகளில் படித்த, வறுமை சூழ்ந்த குடும்பப் பின்னணி கொண்ட மாணவ, மாணவிகளின்தேர்ச்சி விகிதம் பிரபலமான பள்ளி மாணவ, மாணவிகளை விட அதிகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications