நான்கு நாள் போலீஸ் காவலில் சுப. இளவரசன்
சேலம்:
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படை தலைவர் சுப.இளவரசனும், அவரது கூட்டாளி சகாதேவனும் சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடிப்பாலாறு வனப் பகுதியில் சுப. இளவரசனும், சகாதேவனும்புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் சேலம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மிகுந்தபாதுகாப்புடன் இளவரசன் சேலம் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் வந்த வேனை புகைப்படம் எடுக்கக்கூட பத்திரிக்கையாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இருவரையும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க கொளத்தூர் போலீஸார், மேட்டூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இதை ஏற்ற நீதிபதி ஹரிதாஸ் 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இளவரசனுடன் பிடிபட்ட சகாதேவன் மீது இதுவரை வழக்கு ஏதும் இல்லை, இவர் ஒரு அரவாணி என்றும்கூறப்படுகிறது.
முதலில் இளவரசனை திம்மம் துணை ஜெயிலில் அடைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காடடுப் பகுதியைஒட்டிய இந்த ஜெயலில் அவரை அடைப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
"வீரப்பன் விரைவில் பிடிபடுவான்"
இந் நிலையில், வீரப்பனுக்கு ஆயுதங்கள், உணவு கிடைக்க உறுதுணையாக இருந்து வந்த சுப. இளவரசன்பிடிபட்டுள்ளதால் விரைவில் வீரப்பனும் பிடிபடுவான் என்று அதிரடிப்படை கூறுகிறது.
சுப.இளவரசன் பிடிபட்டுள்ளது வீரப்பனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக அதிரடிப்படை கருதுகிறது.












Click it and Unblock the Notifications