அமைச்சர் பொன்னையனுடன் அரசு ஊழியர்கள் சந்திப்பு
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் ஒரு பிரிவான கோட்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தபிரதிநிதிகள் அமைச்சர் பொன்னையனை சந்தித்து பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கவேண்டும் என்று கோ-ரிக்கை விடுத்தனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில் அரசு ஊழியர்கள் மீதானபல்வேறு நடவடிக்கைகளையும் -முதல்வர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுள்ளார். இதேபோல,பறிக்கப்பட்ட சலுகைகளையும் மீண்டும் வழங்க ஜெயலலிதா -நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள் கோ-ரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் சூரிய-மூ-ர்த்தி தலைமையிலான கோட்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறுஅரசு ஊழியர்கள் சங்க பிரதி-நிதிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்னையன், தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ், -நிதித்துறை செயலாளர் -நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, அரசு ஊழியர்கள் மீதான பல்வேறு நடவடிக்கைகளை ரத்து செய்தது போல,பறிக்கப்பட்ட சலுகைகள், நிறுத்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு, சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ததைதிரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோ--ரிக்கைகளையும் அரசு ப-ரிவுடன் ப-ரிசீலனை செய்துமீண்டும் வழங்க வேண்டும் என்று கோ-ரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட பணிஉயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களது கோ-ரிக்கைகள் குறித்து விளக்க அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் பொன்னையனை கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications