இளங்கோவன் மகன் திருமணத்திற்கு வருகிறார் சோனியா
சென்னை:
மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமணம் மற்றும்திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினின் மகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகிறார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுக்கு வருகிற ஜூன் 6ம் தேதி சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் ராமநாதசெட்டியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
இதே நாளில் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கும், சபேசனுக்கும் அண்ணா அறிவாலயம்கலைஞர் அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. இரு திருமண நிகழ்ச்சிகளிலும் சோனியா காந்தி கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்காக 6ம் தேதி காலை அவர் சென்னை வருகிறார். திருமணங்களில் கலந்து கொண்டு விட்டுஅன்று மாலை அவர் டெல்லி திரும்புகிறார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக சோனியா காந்தி சென்னைவருவதால் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க காங்கிரஸார் திட்டமிட்டுள்ளனர்.