For Daily Alerts
Just In
தமிழ் இரண்டாம் தாள் நீக்கம்; கண்டித்து தமிழறிஞர்கள் போராட்டம்
சென்னை:
பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடங்களில் தமிழ் இரண்டாம் தாள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துசென்னையில் தமிழறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பிளஸ் ஒன் எனப்படும் 11வது வகுப்பு மற்றும் பிளஸ் டூ எனப்படும் 12வது வகுப்புப்பாடத் திட்டத்திலிருந்து தமிழ் இரண்டாம் தாள் மற்றும் ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகிய பாடங்கள்நீக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.
இந் நிலையில் தமிழ் இரண்டாம் தாளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் 25 பேர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸார் 25 பேரையும் கைது செய்து பின்னர்விடுதலை செய்தனர்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, May 29, 2004, 5:30 [IST]