For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய 7 பேர் கைது
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சுங்க இலாகாவைச் சேர்ந்த 7 பேரை மத்தியபுலனாய்வுத் துறை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
கொழும்புவிலிருந்து சஹாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பயணியிடம் சுங்கத் துறைஅதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுத்தால்தான் அவரது பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கமுடியும் என்று பேரம் பேசினர்.
இது குறித்து அந்தப் பயணி மத்திய புலனாய்வுத் துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்துலஞ்சம் தர ஒத்துக் கொள்வதாக அந்தப் பயணியிடம் கூறச் சொன்ன சிபிஐ போலீஸார், அவ்வாறு லஞ்சம்கொடுத்தபோது பாய்ந்து சென்று சுங்க இலாகா அதிகாரிகள் 7 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சுங்க இலாகா உதவி ஆணையரும் அடங்குவார். அவர்களிடமிருந்து ரூ.25,000ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, May 30, 2004, 5:30 [IST]