வாக்காளர் பட்டியலிலும் புகைப்படம்: தேர்தல் ஆணையம்
டெல்லி:
கள்ள ஓட்டு போடுவதை முழுமையாகத் தவிர்க்க வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படத்தை வெளியிடதேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது:-
ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டுப் போடுவதையும், ஒருவர் இரண்டு இடங்களில் ஓட்டு போடுவதையும் தடுக்கவாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு இறுதியில் சில மாநில சட்டசபைகளுக்கு நடக்கஇருக்கும் தேர்தலுக்கு இந்த முறையை புகுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்தமுறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்க கூடுதலாக 60 சதவீதம் செலவு பிடிக்கும்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் இந்தத் தேர்தலில்லட்சக்கணக்கானோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இத்தகைய குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
வாக்குப்பதிவு விவரங்களை இணையதளங்கள் மூலம் பரிமாறிக் கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications