தமிழக அரசிடம் ஒத்துழைப்பு கிடைக்காது: ராஜா
பெரம்பலூர்:
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் எங்களால் செய்யமுடியாது. ஆனால் இந்தஅரசு இருக்கும் வரையில் ஒத்துழைப்பு அளிக்காது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாகூறினார்.
மத்திய அமைச்சரான பின்பு முதன்முதலாக பெரம்பலூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால்மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
ஆனால், தமிழக நதிகளைத் தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கிய ரூ. 1,500 கோடி மதிப்புடையதிட்டங்களைக் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை.
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு திட்டத்தையும் செயல்படுத்தமுடியாது. இந்த அரசு இருக்கும்வரையிலும் ஒத்துழைப்பு கிடைக்காது.
குளித்தலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முசிறி, துறையூர், தம்மம்பட்டி வழியாக சேலம்வரையிலும், துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம் வழியாக பாண்டிச்சேரிகடற்கரை சாலையில் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றார் ராஜா.