சோதனை முறையில் நாளை வீராணம் நீர் விநியோகம்
சென்னை:
வீராணம் குடிநீர் நாளை சோதனை முறையில் விநியோகிக்கப்படவுள்ளது என்று அரசுத் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
மே மாத இறுதிக்குள் சென்னைக்கு வீராணம் நீர் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல்பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்கான பணிகளைப் பொதுப்பணித் துறையினரும், சென்னைக் குடிநீர்வாரியத்தினரும் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
வீராணம் பகுதியிலிருந்து போரூர் வரை 208 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ராட்சதக் குழாய்களில்நீர்க்கசிவு ஏற்படும் வாய்புள்ளதா என்பது கடந்த சில வாரங்களாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந் நிலையில் வீராணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குழாய் மூலம்சென்னைக்கு குடிநீரைக் கொண்டு வந்து விநியோகிக்கும் பணியை, சோதனை முறையில் நாளை மேற்கொள்ளதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்தச் சோதனை முயற்சியின் முடிவைப் பொருத்து விரைவில் சென்னைக்கு முழு விநியோகம் செய்யப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.