மதுரை-ராமேஸ்வரம் அகல பாதை பணிக்கு முன்னுரிமை: வேலு
சென்னை:
மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-மானாமதுரை இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாகமாற்றும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுகூறியுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் வேலு. பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-மானாமதுரை இடையிலான அகலபாதைப் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளஅனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் அகல பாதையாகமாற்றப்படும். இந்தப் பணிகளுக்காக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தாம்பரம்-சேலையூர் சாலையில் ரூ. 1.2 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும். ஆறு மாதத்தில் இப்பணிமுடியும். தாம்பரம் சானிட்டோரியம் அருகே கட்டப்பட்டு வரும் சப்வே பாலம் 6 மாதத்தில் முடிவடையும்.
மண்டபத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே கடலில் உள்ள பாம்பன் பாலம் அருகே புதிய அகல ரயில் பாதைஅமைக்க சர்வதேச டெண்டர் கோரப்படும் என்று கூறினார் அமைச்சர் வேலு.












Click it and Unblock the Notifications