For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி: பிரதமரை ஜெ. சந்திக்க விவசாயிகள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டி தமிழக காவிரி டெல்டாப் பகுதிகளுக்கு கர்நாடகத்திடமிருந்து தண்ணீர்பெற்றுத் தர பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகம் உரிய நீரை தமிழகத்திற்குத் தராததால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட முடியாத நிலை உள்ளது. கர்நாடகம் தண்ணீர்தருமா என்று தெரியவில்லை. எனவே காவிரி ஆணையக் கூட்டத்தை மன்மோகன் சிங் உடனடியாகக் கூட்டிகர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமரைச் சந்தித்து காவிரி ஆணையத்தைக் கூட்ட கோரிக்கை விடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் நலனை முன்னிட்டு, பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடியைத் தொடங்கபுதிய கடன்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X