ஸ்ரீவில்லிபுத்தூர்: காலராவுக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காலராவுக்கு சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் காலரா பாதிப்பு நிலவி வருகிறது.சுகாதாரமற்ற குடிநீர் காரணமாகவே இந்த காலரா பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் காலரா பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக 30க்கும்மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பார்வதி என்ற பெண்ணும், எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த ஒரு சிறுவனும் சிகிச்சை பலனளிக்காமல்இறந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications