கலாம், மன்மோகன் சிங்கை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்திக்க தமிழக ஆளுநர் ராம்மோகன்ராவ் டெல்லி சென்றுள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ராம்மோகன் ராவ். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் நட்பைப் பெற்ற ராவ், நாயுடு பரிந்துரையின் பேரில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளால் வரவேற்கப்பட்ட ராம்மோகன் ராவ் பின்னர் அவர்களின்விமர்சனத்திற்கு ஆளானார். முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து அவர் எந்தக் கேள்வியையும்கேட்பதில்லை, எதிர்க்கட்சிகளின் புகார்களை கண்டுகொள்வதில்லை, செயல்படாத ஆளுநராக ராவ் மாறி விட்டார்என்றெல்லாம் திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் செய்தன.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற பேச்சு பரவி வருகிறது.இந்தச் சூழ்நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ராவ்.
இருவரையும் சந்தித்து விட்டு ஜூன் 2ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக ஆளுநர் மாளிகைசெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications