மதுரைக்கு காரில் வந்த 8 பேர் விபத்தில் பலி
மதுரை:
ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு காரில் வந்த 8 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியானார்கள்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 பேர் மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலைகிளம்பி வந்தனர். பரமக்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த வெற்றிச் செல்வன்,சிவமணி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.படுகாயம் அடைந்த 6 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரதுநிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, கன்னியாகுமரியிலிருந்து காரில் மதுரைக்கு வந்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்சாலை விபத்தில் பலியானார்கள்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நாசர் என்பவரது குடும்பத்தினர் காரில் மதுரை வந்து கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நான்குநேரி புறவழிச்சாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து கார்மீது மோதியது.
இதில் நாசர், அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கார் டிரைவர் படுகாயம்அடைந்தார்.












Click it and Unblock the Notifications