கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு மன்னிப்பு கிடையாது: ப.சிதம்பரம்
டெல்லி:
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்யவும், வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்துவரிகளை வசூலிக்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை தயாரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
1998-ம் ஆண்டில் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் முறையை அமல்படுத்தியபோது கறுப்புப்பணத்தைத் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
புதிய திட்டம் விரைவில் வருகிறது. அதில் மன்னிப்புக்கு இடம் இருக்காது.
ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தாமாக முன்வந்து வருமானத்தைத் தெரிவிப்போர் 30 சதவீதம் வரிசெலுத்தினால் போதும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டத்தில் பல பிரிவுகள் இருக்கும்.
கறுப்புப் பணம் வைத்திருப்போர், கள்ளச் சந்தைக்காரர்கள், அத்தியாவசிய பொருள்களைப் பதுக்குவோர் மீதுகடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் பொது செயல் திட்டத்தின் பொருளாதாரஅம்சங்களில் கூறப்பட்டுள்ளது. வரி வசூல் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications