தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடி குறைப்பு: ஜெ. சலுகை மழை
சென்னை:
மூன்றாண்டு முன் அமலாக்கிய மின் கட்டண உயர்வை முதல்வர் ஜெயலலிதா திடீரென ரத்துசெய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் விழுந்த அடியைத் தொடர்ந்து, தான் அமலாக்கிய பல்வேறு கடுமையானநடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட்டுள்ளது. அத்தோடு சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2001ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உயர்த்தப்பட்ட வீடுகளுக்கான மின்கட்டணத்தை இப்போது திரும்பப் பெற்றுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் தமிழகத்தில் மின்கட்டணம் குறைகிறது.
இந்த கட்டணக் குறைப்பால் அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்படும்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2001ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெறுகிறது.இதன் மூலம் 116.57 லட்சம் குடும்பங்கள் பலனடைவர். இந்த கட்டணக் குறைப்பு வரும் ஜூன் 16ம்தேதி முதல் அமலுக்கு வரும்.
இதனால் அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்படும். இந்தத் தொகையை மானியமாக மின்துறைக்குஅரசு வழங்கும்.
குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ. 1.10 ஆக தற்போது உள்ளது. இது 75 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.அதிகபட்ச கட்டணம் ரூ.4.75 ஆக தற்போது உள்ளது. இது ரூ.3.05 ஆக குறைக்கப்படுகிறது.
புதிய கட்டணப்படி 1 முதல் 25 யூனிட் வரை 75 பைசாவும், 26 முதல் 50 யூனிட் வரை 85 பைசாவும், 51 முதல் 100யூனிட் வரை ரூ. 1.50 ரூபாயும், 101 முதல் 300 யூனிட் வரை ரூ. 2.20 ரூபாயும், 301 யூனிட்டும் அதற்கு மேலும்உள்ள யூனிட்டுகளுக்கு ரூ. 3.05 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
உதாரணத்துக்கு, மாதத்துக்கு 250 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் இப்போது மாதம்ரூ. 720 கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பால் அது ரூ. 450 ஆகக்குறையும்.
இந்த மின் கட்டணக் குறைப்பு காரணமாக லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனைடையும். இதுபோன்ற சலுகையை இந்தியாவில் எந்த மாநில அரசும் வழங்கியதில்லை.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications