கலெக்டர்கள் மாற்றம்: ப.சிதம்பரம், ராமதாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றியுள்ளதன் மூலம் தமிழகத்தில் நிர்வாக சீர்திருத்தம் என்றபெயரில் அலங்கோலம் நடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 52 சீட்டுக்களைக் கொண்ட சீட்டுக் கட்டை எத்தனைதடவை பிரித்து, சீட்டுக்களை கலைத்துப் போட்டாலும் அந்த சீட்டுக்களை வைத்துத்தான் சீட்டாட்டம் நடைபெறும்.

அதேபோலத்தான், அதிகாரிகளை எத்தனை முறை எங்கே மாற்றிப் போட்டாலும் அவர்களை வைத்துத்தான் ஆட்சிநிர்வாகத்தை நடத்த முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பது,தேவையில்லாத ஒன்று. இதை நிர்வாக சீர்திருத்தம் என்று சொல்லக் கூடாது, இது நிர்வாக அலங்கோலம் என்றார்அவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் 11 வது முறையாகஅதிகாரிகளை மாற்றியுள்ளது அதிமுக அரசு. 24 மாவட்ட ஆட்சித் தலைவர்களை மாற்றியுள்ளதன் மூலம், நன்றாகசெயல்படும் அதிகாரிகளை அரசு பழிவாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

15 ஆட்சித் தலைவர்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இப்படி நடப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+