தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவை: இலங்கை தூதர் நம்பிக்கை
மதுரை:
தூத்துக்குடிக்கும், கொழும்பு நகருக்கும் இடையிலான சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில்தொடங்கும் என இலங்கை துணைத் தூதர் சுமித் நகுந்தலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையிலானபயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை அரசு ஆவலாக உள்ளது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இப்போது இதை தொடங்குவது சரியாக இருக்காது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறி விட்டார். ஆனால் தற்போதைய மாறியுள்ள சூழ்நிலையில் இந்த சேவையைதொடங்குவது பொருத்தமாக இருக்கும்.
இந்த கப்பல் போக்குவரத்து குறித்து மாநில அரசின் கருத்தை மத்திய கப்பல் துறை அமைச்சகம் கோரியுள்ளது.எனவே விரைவில் இந்த சேவைக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கொழும்பு நகரிலிருந்து கொச்சி நகருக்கு கப்பல் போக்குவரத்தை நடத்தினால் சரியாக இருக்காது. இதனால்இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வர விரும்பும் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். தூத்துக்குடிதான் இந்த கப்பல்சேவைக்கு சரியான நகராகும் என்றார் நகுந்தலா.












Click it and Unblock the Notifications