தமிழக காங்.குக்கு மேலும் அமைச்சர்கள் தேவை: வாசன்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவர் சத்தியமூர்த்தி பவனில் உள்ள தனது அலுவலகத்தில்செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். இதுமகிழ்ச்சியைத் தருகிறது. அதேசமயம், 12 பேரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே என்பதுசிறிது வருத்தத்தையும் தருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசவுள்ளேன்.தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மேலும் சிலருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி அபாரமாக இருக்கும், மேலும், தமிழக நலத் திட்டங்களைவிரைந்து செயல்படுத்த உதவியாகவும் இருக்கும் என்றார் அவர்.
மத்திய அமைச்சரவையில் வாசன் ஆதரவாளர்கள் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications