விடுப்பு எடுக்காத பொறியியல் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வரும் பொறியியல் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திலும் 5மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் அக மதிப்பீட்டு முறை மூலம் 20 மதிப்பெண்கள்வழங்கப்படும். இதில் ஒவ்வொரு பாடத்திலும் அதற்குரிய வகுப்புகளில் ஒரு நாள்கூட லீவு எடுக்காமல் வகுப்புக்குவரும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. க
மாணவர் வருகைப் பதிவை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எடுக்கின்றவிடுமுறையைப் பொருத்து இந்த மதிப்பெண்கள் குறையும்.
இந்த கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications