பஞ்சாயத்து ராஜ் துறைக்கு ஆலடி அருணா எதிர்ப்பு; கலாமுக்கு கடிதம்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் அரசியல் சட்டத்திற்கு முரணாக பஞ்சாயத்து ராஜ் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி,ஆலடி அருணா (முன்னாள் திமுக அமைச்சர்) குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாயத்து ராஜ் என்ற புதிய துறை மத்தியஅமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு முரணானது. உள்ளூர் நிர்வாகம்என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. அரசியல் சட்டத்தின் 8-வது பிரிவில் இது மிகவும் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாயத்து ராஜ் என்ற இலாகாவை உருவாக்க பிரதமர் மன்மோகன் சிங் எப்படி சம்மதித்தார்என்பது புரியவில்லை.
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் துறை குறித்து சட்ட வல்லுநர்களுடன் விவாதித்துஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் ஆலடி அருணா.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ஆலடி அருணா தற்போது பாஜகவில் உள்ளார். பஞ்சாயத்து ராஜ்அமைச்சராக மணிசங்கர் அய்யர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.