புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: ஆர்.சி. லஹோடி
டெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரமேஷ் சந்திர லஹோட்டி இன்று பதவியேற்றார்.
தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு இன்று ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக லஹோட்டிபதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், அர்ஜூன் சிங்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
லஹோட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குணாவில் 1940ம் ஆண்டு பிறந்தார். 1962ம் ஆண்டுவழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். மாவட்ட நீதிபதியாகவும், மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றநீதிபதியாகவும் பணியாற்றினார்.
1994ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும்நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் பதவியேற்ற தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு ஓய்வு பெறுவதையடுத்து புதியதலைமை நீதிபதியாக லஹோட்டி இன்று பதவியேற்றார். 18 மாதங்களுக்கு இவர் இந்தப் பதவியை வகிப்பார்.












Click it and Unblock the Notifications