மதுரை உயர்நீதிமன்ற கிளை: சுபாஷன் ரெட்டி புதிய முடிவு
சென்னை:
நாடாளுமன்ற ஒப்புதல் வரும் வரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவை தள்ளி வைப்பதென சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான மதுரை உயர்நீதிமன்றக் கிளைக் குழு முடிவுசெய்துள்ளது.
மதுரை உலகனேரியில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதில் பல இடையூறுகள்ஏற்பட்டுள்ளன. 3 முறை தேதி குறிப்பிடப்பட்டு திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதனால் தென்மாவட்ட வழக்கறிஞர்கள், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சுபாஷன் ரெட்டி தலைமையிலான மதுரை உயர்நீதிமன்றக் கிளை கட்டடக் குழு சென்னையில்கூடியது. இந்தக் குழுவில், உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், பொதுப்பணித்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள்உள்ளனர்.
இந்தக் குழுவின் கூட்டத்தில், நாடாளுமன்ற ஒப்புதல் வரும் காத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை கிளை இப்போதைக்கு திறக்கப்படும் வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications