லாக்-அப்பில் கைதி சாவு: 2 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை
கடலூர்:
லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்விரைவு நீதிமன்றத்தில் 2 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி விருத்தாச்சலம் அருகே உள்ள கம்மாபுரம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் அந்தோணிச்சாமி, ஏட்டுக்கள் வீராசாமி, ராமசாமி ஆகியோர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாகராசாக்கண்ணு என்ற விவசாயியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அடுத்த நாள் விவசாயி ராசாக்கண்ணு தப்பி ஓடி விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் கூறியுள்ளனர்.இதைக் கேட்ட ராசாக்கண்ணுவின் குடும்பத்தினர் அதிர்ச்சியுற்றனர். இந் நிலையில் மீன்சுருட்டி பகுதியில்ராசாக்கண்ணுவின் உடல் சில நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் கூறியதற்கும், ராசாக்கண்ணு பிணமாக கிடந்ததற்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதைப் பார்த்தராசாக்கண்ணுவின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்துராசாக்கண்ணு மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் இறுதியில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிச்சாமி, ஏட்டுக்கள் வீராசாமி,ராமசாமி ஆகியோர் மீது விவசாயியைக் கொலை செய்ததாகவும், இன்ஸ்பெக்டர் பாஷ்யம், சப் இன்ஸ்பெக்டர்சுப்ரமணியம் ஆகியோர் இந்தக் கொலையை மறைத்ததாகவும் கூறி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விருத்தாச்சலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அந்தோணிச்சாமி, வீராசாமி ஆகியோருக்குஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர அந்தோணிச்சாமிக்கு ரூ. 6,700 அபராதமும், வீராசாமிக்கு ரூ. 5700அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏட்டு வீராசாமிக்கு மேலும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 3,500 அபராதமும் விதித்து நீதிபதிஉத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியையும், சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனையும் நிரபராதி என்றுஅறிவித்து இருவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications