சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சரின் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுகமுன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெனீபர் சந்திரன், அவரது கணவர் சந்திரன், முகம்மது அப்துல் காதர் உள்ளிட்ட 5 பேர் மீது தூத்துக்குடி முதன்மைநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வரும் 14ம் தேதி குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவுள்ளது.
இந் நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெனீபர் சந்திரன் மனுத் தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி, ஜெனீபரின் கோரிக்கையை நிராகரித்தார்.
ஜெனீபர் சந்திரன் தற்போது அதிமுகவில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications