இலங்கையை மறுசீரமைக்க இந்தியா உதவும்: நட்வர்சிங்
டெல்லி:
இலங்கையின் மறுசீரமைப்பு, மறுவாழ்வு பணிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறைஅமைச்சர் நட்வர் சிங் கூறியுள்ளார்.
இலங்கைத் தூதர் லட்சுமண் கதிர்காமருடன் ஆலோசனை நடத்திய நட்வர்சிங், பின்னர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
இலங்கை பிரச்சினையில் இந்தியாவினால் எந்தவிதமான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதை நிச்சயம்செய்வோம். இந்த ஆலோசனையை குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் திமுக,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இயல்பாகவே இவ்விஷயத்தில் ஆர்வமாக இருக்கின்றன என்று கூறினார்.
பின்னர் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கையின் அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கை மக்களிடம்நிலவி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர விடுதலைப் புலிகள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எதைப்பற்றியெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து இப்போது ஆலோசனை நடைபெற்று வருகிறதுஎன்றார்.












Click it and Unblock the Notifications