For Quick Alerts
For Daily Alerts
Just In
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்:
மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் இந்த மாதம் 12ம் தேதி வாக்கில் வழக்கம் போல அணைதிறக்கப்படுமா என்ற பெரும் கேள்விக்குறி நிலவி வருகிறது. இதனால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள்பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,061 கன அடியாக இருந்தது. சனிக்கிழமை இது 1,896 கனஅடியாக உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை 2,014 கன அடியாக உயர்ந்தது. நேற்று விநாடிக்கு 3,215 கன அடி தண்ணீர்வந்து கொண்டிருந்தது. அணையில் தற்போது 30.80 அடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, June 1, 2004, 5:30 [IST]