பால் கொள்முதல் விலை உயர்வு: ஜெவின் தொடரும் சலுகை
சென்னை:
பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பால் விற்பனை விலை உயராது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா முன்னர் பிறப்பித்த பல உத்தரவுகளை திரும்பப பெற்றும், பலபுதிய சலுகைகளை அறிவித்தபடியும் வருகிறார். நேற்று மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து உத்தரவு பிறப்பித்தஅவர் இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.9.50லிருந்து ரூ.10.50 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல் எருமைப்பாலின் கொள்முதல் விலை ரூ.1.04 அதிகரிக்கப்பட்டு, ரூ.12.50 புதிய விலையாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்-தநட-வ-டிக்-கை இன்-று மு-தல் அம-லுக்-கு வ-ரும். இந்த கொள்முதல் விலை உயர்வால் பால் விற்பனை விலை உயராது.
கிராமப் புறங்களில் ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 1,000 பசுக்கள் இருக்கும் வகையில் பசுக்களின்எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.
பசுக்களை வாங்க குறைந்த வட்டி விகிதத்தில் அரசு கடன் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெவின் அதிரடி அறிவிப்புகள்:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் விவரம்:
ஆசிரியர்கள் மீதான தண்டனைகள் ரத்து.
இல்லாதவர்களுக்குப் புதிய அட்டைகள்.
பாஸ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து நாள்களிலும் 50
சதவீதச் சலுகைக் கட்டணத்தில் பஸ் பாஸ்.












Click it and Unblock the Notifications